Sunday, May 2, 2010

கவி


அன்றைய கவி காவியத்தால் மலர்ந்தது ;
என் கவி நோதலில் பூத்தது,
இன்றைய கவி காதலில் மலர்ந்தது;
என் கவி வேதனையில் பூத்தது,

தனிமை இனிமையானது;
இனிமை தனிமை கவியானது,
இரவு பகலானது;
பகலிரவு கவியானது,

துன்பம் இன்பமானது;
இன்பதுன்பம் கவியானது,
வெறுப்பு விருப்பானது;
விருப்பு வெறுப்பு கவியானது,

கண்ணீர் மையானது;
மை கவியானது,
என்னை மறந்தேன்,
கவியில் உறைந்தேன்.
க.தி .வளவன்....

4 comments: