
இன்றைய காலத்தில் இலக்கியக்களை எமது வாழ்க்கையோடு இணைத்து பார்க்கவேண்டும்.பல பிரச்சனைகளுக்கு எமக்கு தீர்வு கிடைக்கும்.
யாருக்கு பிரச்சனை இல்லை ? எல்லோருக்கும்தான் பிரச்சனை உண்டு .போராடி வெல்வோம் .
இராமாயணத்தை எடுத்து நோக்குவோம் .அன்பின் வடிவமான இராமபிரான் இராமாயணத்தில் கதாநாயகன்.அவர் பிரச்சனைகளை தேடி போகவில்லை ,மாறாக பிரச்சனைகள் அவரை தேடி வந்தது .
சகுனியின் சூழ்ச்சியாலும் கைகேயின் வரத்தாலும் பரதன் நடால இராமன் காடு செல்ல வேண்டியதாயிற்று.இராமனுக்கு பிரச்சனை ஆரம்பித்தது.வனத்தில் இளைய பிரான் இலட்குமனனுடனும் ,வனத்தின் தலைவன் குகனுடனும் ,கற்பின் தேவதை சீதா தேவியுடனும் வாழ்ந்து வரும் காலங்களில் சூற்பனகை மூலமாக பிரச்சனைகள் வந்தது .அவள் இராமனை மணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இராமனிடம் தனது விருப்பத்தை தெருவிக்கையில் இராமபிரான் அதை மறுத்தார் .இராவணனின் துணையுடன் இராமனை அடையவேண்டும் என சீதையை பற்றி எடுத்து கூறினாள்.சூற்பனகை அண்ணன் இராவணன் சீதையை இலங்காபுரியில் சிறை வைக்கிறான் .இப்படி பல பிரச்சனைகள் இராமனை தொடர்ந்தது .
இதிலிருந்து நாங்கள் விளங்கி கொள்ளவேண்டியது ,பிரச்சனைகளை நாங்கள் விட்டு விலகினாலும் பிரச்சனை எங்களை தொடர்த்துகொண்டே இருக்கும் .பிரச்சனை பிறக்கும் முன்னும் இருந்தது ,இறந்த பின்னும் இருந்துகொண்டே இருக்கும் .ஆனால் நாங்கள் தான் இடையில் வந்து பிறந்தோம். இராமனை பிரச்சனைகள் தொடர்துகொண்டே இருந்தது .ஆனால் அதை எல்லாம் இலகுவாக முறியடித்தார் தனது நம்பிக்கையால். இதை போல நாங்களும் முறையடிக்க முயலவேண்டும் .பிரச்சனைகளை கண்டு ஓடி ஒழிக்காமல் ,போராடி வெல்வோம் .
க.தி .வளவன்....
nambiikai vaazhvin adittalam..
ReplyDelete