Monday, May 17, 2010

ஒழிந்த காதல்



முகத்தில் தெரிந்தது
அகத்தில் ஒழிந்த
காதலை,

பேச்சில் தெரிந்தது
மூச்சில் ஒழிந்த
காதலை,

கண்ணில் தெரிந்தது
பெண்ணில் ஒழிந்த
காதலை,

மடலில் தெரிந்தது
மனதில் ஒழிந்த
காதலை,

கனவில் தெரிந்தது
நனவில் ஒழிந்த
காதலை,

கவியில் தெரிந்தது
கற்பனையில் ஒழிந்த
காதலை,

பிரிவில் தெரிந்தது
காதலில் ஒழிந்த
நோதலை...

க.தி .வளவன்....

1 comment: