Friday, April 9, 2010

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாக நடக்கும்

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்

"எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும்" இது கீதாசாரத்தில் இருந்து ஒரு பகுதி, எது உண்மையோ பொய்யோ இந்த வரி மட்டும் நுற்றுக்கு நுறு வீதம் உண்மை. நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது நாம் அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் இந்த உண்மையை நாம் அனேகர் உணர்ந்து கொள்ள முடிவது இல்லை. என்னுடைய வாழ்வில் நான் பார்த்தது உணர்ந்தது இதுதான், தலையை பிடுங்கி தலை கீழாக நின்றாலும் வருகிற முடிவை மாற்ற முடியாது, நம்மை வருத்தி என்னத்தை கண்டோம் இன்றையை பற்றி கவலைப்படுவோம், ஏன் என்றால் அதுவும் நன்றாகவே நடக்கும், ஏன் என்றால் நடந்ததும் நன்றாக நடந்தது.


Source and Thanks:

No comments:

Post a Comment