Tuesday, June 1, 2010

வாழ்ந்து காட்டுவோம்

காலம் எம்மை
கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை
கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை
தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை
கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை
பிழிந்து எடுத்தாலும்,
வாழ்க்கை எம்மை
வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை
விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்.
ஆக்கம்-க.தி .வளவன்....

1 comment: