
தாய் மண்ணை ,
நினைக்கும் பொழுது,
காற்றில் மிதந்தோம்,
பழைய நினைவில்,
கற்ற பள்ளியை,
நினைக்கும் பொழுது,
கனவில் நனைந்தோம்,
மீண்டும் பள்ளியில்,
பள்ளி நண்பனை,
சந்திக்கும் பொழுது,
முதுமை மறந்தோம்,
மீண்டும் பிறந்தோம்,
உயிர் நண்பனை,
அணைக்கும் பொழுது,
உள்ளம் மகிழ்ந்தோம்,
அன்பில் கலந்தோம்,
உற்ற உறவை ,
பிரியும் போது,
உயிரை இழந்தோம்,
கண்ணீரில் நனைந்தோம் ...
ஆக்கம்-க.தி .வளவன்....
No comments:
Post a Comment