Sunday, May 16, 2010

ஜெசிக்கா வாட்சனின் துணிகரச் செயல்



பதினாறு வயதுடைய ,துணிகரச் செயல் விழைதவருமாகிய கப்பலோட்டி ஜெசிக்கா வாட்சனின் (Jessica Watson) ஆஸ்திரலிய(Australia) மண்ணுக்கு மிகப் பெரிய சாதனை ஒன்றை வைகாசி 15, 2010 இல் பெற்று தந்துள்ளார்.

ஜெசிக்கா வாட்சன் தனது பயணத்தை அக்டோபர் 18, 2009 சிட்னி துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்து,210 நாட்களில் நிற்காது,யாரின் துணையின்றி பாய் மர படகின்(10-metre yacht Ella's Pink Lady) துணையுடன் உலகை சுற்றி வந்த முதலாவது இளம் வீரராக திகழ்கிறார்.


நீ ஒன்றை வெற்றி கொள்ளவேண்டும் என்றால் கனவுகாண்,நம்பு உன்னால் முடியும் என்று ,கடிமையாக உழை கனவை நனவாக்க .இதுதான் எனது வெற்றியின் இரகசியம் ,அதை நிருபித்துவிட்டேன் ,என்று தனது இந்த 210 நாள் பயண துணிகர வெற்றியின் பின் சமூகத்திற்காக தெருவித்தார்.

இதனை ஒரு பாடமாக கொண்டு நாங்களும் ஊக்கமாக எமது வெற்றி பயணத்தை தன்னம்பிகையுடன் ஆரம்பிப்போம்.கனவை நனவாக்குவோம் .

உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று?


ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?

க.தி .வளவன்....

Related article from பதிடரனின் பதிவுகள்

4 comments:

  1. Hi Valavan,
    Very good start. Write more details about her.
    -Balesh

    ReplyDelete
  2. Thanks for ur comment and visit. I ll add more details soon:)

    ReplyDelete
  3. encourage all of us to do best...

    ReplyDelete
  4. yes yes I have listen her speech too so much impressed me...

    ReplyDelete