Monday, May 31, 2010

கிராமத்து மழை


ஈசல்கள் கூட்டம் கூட,
எறும்புகள் இரை தேட,
தவளைகள் கீதம் பாட,
பறவைகள் பர பரக்க,

மேகம் திரை மூட,
பானு ஒளி குன்ற,
மண்ணில் இருள் சூழ,
பகல் இரவாக,

இந்திரன் குணம் கொள்ள,
மின்னல் படம் எடுக்க,
இடி இசை இசைக்க,
காற்று உலா வர,

விவசாயி கூத்தாட,
மழலைகள் மகிழ்ந்தாட,
மிருகங்கள் வெருண்டோட,
மரம் ,செடி,கொடிகள் கனாக்கான,

சர சரவென சலங்கை சத்தமிட்டு,
பட படவென விழுதே,
என் வீட்டுத் தகர மத்தளமிட்டு,
கிராமத்து மாரி மழை.

ஆக்கம்-க.தி .வளவன்....

Sunday, May 30, 2010

கவனி

நன்றி -தினகரன் (படம்)

உன் சுவடுகளை கவனி,
உன் வார்த்தைகளை கவனி,
உன் பார்வைகளை கவனி,
உன் செயல்களை கவனி,
உன் சிந்தனைகளை கவனி,
உன் நடத்தைகளை கவனி,
உன் மனத்தை கவனி,
வாழ்க்கை உன்னை கவனிக்கும்...
ஆக்கம்-க.தி .வளவன்....

Saturday, May 29, 2010

பிரிவு


தாய் மண்ணை ,
நினைக்கும் பொழுது,
காற்றில் மிதந்தோம்,
பழைய நினைவில்,

கற்ற பள்ளியை,
நினைக்கும் பொழுது,
கனவில் நனைந்தோம்,
மீண்டும் பள்ளியில்,

பள்ளி நண்பனை,
சந்திக்கும் பொழுது,
முதுமை மறந்தோம்,
மீண்டும் பிறந்தோம்,

உயிர் நண்பனை,
அணைக்கும் பொழுது,
உள்ளம் மகிழ்ந்தோம்,
அன்பில் கலந்தோம்,

உற்ற உறவை ,
பிரியும் போது,
உயிரை இழந்தோம்,
கண்ணீரில் நனைந்தோம் ...
ஆக்கம்-க.தி .வளவன்....

Friday, May 28, 2010

நேரம்



நேரம் ஒரு மூலப்பொருள், அதனை பல்வேறு பயனுள்ள முடிவுப்பொருட்களாக மாற்றுவது எங்கள் ஒவ்வொருவரது கைகளில் தங்கியுள்ளது உள்ளது .
  • நேரத்தை படிப்பில் செலவழியுங்கள் உயர்வும், மரியாதையும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை விளையாட்டில் செலவழியுங்கள் ஆரோக்கியம் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை உழைப்பில் செலவழியுங்கள் வெற்றியும்,செல்வமும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை நட்பில் செலவழியுங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்.
  • நேரத்தை சமூக சேவையில் செலவழியுங்கள் ஆத்ம திருப்தி உங்களை தேடி வரும்.
  • நேரத்தை விடா முயற்சியில் செலவழியுங்கள் செல்வமும்,புகழும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை அன்புக்காக செலவழியுங்கள் அது முதலீடாக மாறி எல்லாம் உங்களை தேடி வரும்.
ஆக்கம்-க.தி .வளவன்....

பேச்சு

அன்பாக பேசு,
அமைதியாக பேசு,
இனிமையாக பேசு,
இயல்பாகபேசு,
உற்சாகமாக பேசு,
சிந்தித்து பேசு,
திட்டமிட்டு பேசு,
மெதுவாக பேசு,
சமயமறிந்து பேசு,
பண்பாக பேசு,
பணிவாக பேசு,
பிரியமுடன் பேசு,
புன்னகையுடன் பேசு,
உணர்ச்சியுடன் பேசு,
மகிழ்ச்சியுடன் பேசு,
தெளிவாக பேசு,
அளவாக பேசு,
விளக்கமாக பேசு,
கருத்துடன் பேசு,
சுருக்கமாக பேசு,
நன்றாக பேசு,
கம்பீரத்துடன் பேசு,
மனிதனாக பேசு,
உண்மையை பேசு.......
ஆக்கம்-க.தி .வளவன்....

Thursday, May 27, 2010

முயற்சி


பதவியிலும் பணிவு,
பணத்திலும் பண்பு,
வேகத்திலும் விவேகம்,
கோபத்திலும் பொறுமை,
ஏழ்மையிலும் நேர்மை,
வறுமையிலும் வள்ளல்,
துன்பத்திலும் துணிவு,
தோல்வியிலும் முயற்சி,
வாழ்க்கையிலும் வெற்றி..
ஆக்கம்-க.தி .வளவன்....

Tuesday, May 25, 2010

அ-ஒள



அன்பை என்றும் வளர்த்திடு,
ஆடி,பாடி மகிழ்ந்திடு,
இதய தாயை போற்றிடு,
ஈகை செய்ய பழகிடு,
உண்மை பேசி உயர்ந்திடு,
ஊரே போற்ற வாழ்ந்திடு,
எண்ணம் உயர வணங்கிடு,
ஏழை மகிழ வாழ்த்திடு,
ஐயம் இட்டு மகிழ்ந்திடு,
ஒற்றுமை உயர உழைத்திடு ,
ஓடி ஓடி உதவிடு,
ஔவை தமிழில் வாழ்ந்திடு.
ஆக்கம்-க.தி .வளவன்....

Saturday, May 22, 2010

விடுதலை


எப்போது தனிமைக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை!

எப்போது வறுமைக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை!

எப்போது அடிமைக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை!

எப்போது பிரிவுக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை!

எப்போது தோல்விக்கு விடுதலையோ?
அப்போது உனக்கு விடுதலை !
ஆக்கம்-க.தி .வளவன்....

Thursday, May 20, 2010

பேசும்-காதல்


விழிகள் பேசும்,
விநாடி பொழுதில்,
மனங்கள் பேசும்,
மர்மம்-காதல்,

மனங்கள் பேசும்,
நொடி பொழுதில்,
இதயங்கள் மாறும்,
மர்மம்-காதல்,

இதயங்கள் மாறும்,
கண பொழுதில்,
கரங்கள் சேரும்,
மர்மம்-காதல் ...
க.தி .வளவன்....

Tuesday, May 18, 2010

இரத்தம் உறையல!!!


இரத்தம் உறையல,
சோகம் தணியல,
வாட்டம் போகல ,
வறுமை தீரல,
வருத்தம் வாடல,
துன்பம் தூங்கல,
கண்ணீர் குறையல,
பிரிவு இன்றல ,
நினைவு தூங்கல,
உறங்க முடியல,
கனவு கனியல ,
தொலைக்க எதுவுமில
விடுதலை கிடைக்கல,
வருடம் முகாமில,
விசாரணை தொடங்கல ,
விடிவு பிறக்கல,
தோல்வி புதிதல,
வெற்றி கிடைக்கல,
துணிவு உறங்கல,
மனம் சோரல,
வாழ்கை கசக்கல,
இயலாதது ஒன்றல்ல,
நம்பிக்கை போகல,
க.தி .வளவன்....

Monday, May 17, 2010

அம்மா


கவிக்கு பாரதி,
கற்புக்கு சீதை,
தமிழுக்கு ஔவை,
வில்லுக்கு அர்ச்சுனன்,
வலிமைக்கு ஆஞ்சினேயர்,
வாய்மைக்கு அரிச்சந்திரன்,
நட்புக்கு இலக்குமணன்.
அகிம்சைக்கு காந்தி ,
கொடைக்கு கர்ணன்,
பண்புக்கு ராமன்,
அன்புக்கு நீ அம்மா,

க.தி .வளவன்....

ஒழிந்த காதல்



முகத்தில் தெரிந்தது
அகத்தில் ஒழிந்த
காதலை,

பேச்சில் தெரிந்தது
மூச்சில் ஒழிந்த
காதலை,

கண்ணில் தெரிந்தது
பெண்ணில் ஒழிந்த
காதலை,

மடலில் தெரிந்தது
மனதில் ஒழிந்த
காதலை,

கனவில் தெரிந்தது
நனவில் ஒழிந்த
காதலை,

கவியில் தெரிந்தது
கற்பனையில் ஒழிந்த
காதலை,

பிரிவில் தெரிந்தது
காதலில் ஒழிந்த
நோதலை...

க.தி .வளவன்....

Sunday, May 16, 2010

ஜெசிக்கா வாட்சனின் துணிகரச் செயல்



பதினாறு வயதுடைய ,துணிகரச் செயல் விழைதவருமாகிய கப்பலோட்டி ஜெசிக்கா வாட்சனின் (Jessica Watson) ஆஸ்திரலிய(Australia) மண்ணுக்கு மிகப் பெரிய சாதனை ஒன்றை வைகாசி 15, 2010 இல் பெற்று தந்துள்ளார்.

ஜெசிக்கா வாட்சன் தனது பயணத்தை அக்டோபர் 18, 2009 சிட்னி துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்து,210 நாட்களில் நிற்காது,யாரின் துணையின்றி பாய் மர படகின்(10-metre yacht Ella's Pink Lady) துணையுடன் உலகை சுற்றி வந்த முதலாவது இளம் வீரராக திகழ்கிறார்.


நீ ஒன்றை வெற்றி கொள்ளவேண்டும் என்றால் கனவுகாண்,நம்பு உன்னால் முடியும் என்று ,கடிமையாக உழை கனவை நனவாக்க .இதுதான் எனது வெற்றியின் இரகசியம் ,அதை நிருபித்துவிட்டேன் ,என்று தனது இந்த 210 நாள் பயண துணிகர வெற்றியின் பின் சமூகத்திற்காக தெருவித்தார்.

இதனை ஒரு பாடமாக கொண்டு நாங்களும் ஊக்கமாக எமது வெற்றி பயணத்தை தன்னம்பிகையுடன் ஆரம்பிப்போம்.கனவை நனவாக்குவோம் .

உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று?


ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?

க.தி .வளவன்....

Related article from பதிடரனின் பதிவுகள்

Saturday, May 15, 2010

பிரச்சனைகள் !!!!!!!!




இன்றைய காலத்தில் இலக்கியக்களை எமது வாழ்க்கையோடு இணைத்து பார்க்கவேண்டும்.பல பிரச்சனைகளுக்கு எமக்கு தீர்வு கிடைக்கும்.

யாருக்கு பிரச்சனை இல்லை ? எல்லோருக்கும்தான் பிரச்சனை உண்டு .போராடி வெல்வோம் .

இராமாயணத்தை எடுத்து நோக்குவோம் .அன்பின் வடிவமான இராமபிரான் இராமாயணத்தில் கதாநாயகன்.அவர் பிரச்சனைகளை தேடி போகவில்லை ,மாறாக பிரச்சனைகள் அவரை தேடி வந்தது .

சகுனியின் சூழ்ச்சியாலும் கைகேயின் வரத்தாலும் பரதன் நடால இராமன் காடு செல்ல வேண்டியதாயிற்று.இராமனுக்கு பிரச்சனை ஆரம்பித்தது.வனத்தில் இளைய பிரான் இலட்குமனனுடனும் ,வனத்தின் தலைவன் குகனுடனும் ,கற்பின் தேவதை சீதா தேவியுடனும் வாழ்ந்து வரும் காலங்களில் சூற்பனகை மூலமாக பிரச்சனைகள் வந்தது .அவள் இராமனை மணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இராமனிடம் தனது விருப்பத்தை தெருவிக்கையில் இராமபிரான் அதை மறுத்தார் .இராவணனின் துணையுடன் இராமனை அடையவேண்டும் என சீதையை பற்றி எடுத்து கூறினாள்.சூற்பனகை அண்ணன் இராவணன் சீதையை இலங்காபுரியில் சிறை வைக்கிறான் .இப்படி பல பிரச்சனைகள் இராமனை தொடர்ந்தது .

இதிலிருந்து நாங்கள் விளங்கி கொள்ளவேண்டியது ,பிரச்சனைகளை நாங்கள் விட்டு விலகினாலும் பிரச்சனை எங்களை தொடர்த்துகொண்டே இருக்கும் .பிரச்சனை பிறக்கும் முன்னும் இருந்தது ,இறந்த பின்னும் இருந்துகொண்டே இருக்கும் .ஆனால் நாங்கள் தான் இடையில் வந்து பிறந்தோம். இராமனை பிரச்சனைகள் தொடர்துகொண்டே இருந்தது .ஆனால் அதை எல்லாம் இலகுவாக முறியடித்தார் தனது நம்பிக்கையால். இதை போல நாங்களும் முறையடிக்க முயலவேண்டும் .பிரச்சனைகளை கண்டு ஓடி ஒழிக்காமல் ,போராடி வெல்வோம் .

க.தி .வளவன்....

Tuesday, May 11, 2010

வாழ்கை


தனிமை தணியல ,
வறுமை தீரல,
வருத்தம் வாடல,
துன்பம் தூங்கல,
கண்ணீர் குறையல,
பிரிவு இன்றல ,
உறங்க முடியல,
கனவு கனியல ,
தோல்வி புதிதல,
வெற்றி கிடைக்கல,
துணிவு உறங்கல,
மனம் சோரல,
வாழ்கை கசக்கல,
நம்பிக்கை போகல...........
க.தி .வளவன்....

To see facebook comments

Monday, May 10, 2010

மாலை பொழுது



மாலை பொழுதினிலே,
மலர் தூங்கும் வேளையிலே,
வேலை முடித்துவிட்டு,
யன்னலோரம் அமர்கையிலே,
தேனை குடித்துவிட்டு,
தேன் குழவி பறகையிலே,
காற்றை கிழித்துக்கொண்டு,
காதோரம் கவி பறந்ததம்மா...
க.தி .வளவன்....

Saturday, May 8, 2010

பெறுமதி


மிக பிரபல்யமான ஒரு பேச்சாளர் ஒருவர் தனது பேச்சை 1 வெள்ளி பணத்தை கையில் வைத்தபடி ஆரம்பித்தார். பேசிகொண்டிருகையில் அவர் சபையில் உள்ளவர்களை கேட்டார், யாருக்கு இந்த 1 வெள்ளி பணம் வேண்டும் என்று ?ஒவ்வொருவரது கைகளும் உயர ஆரம்பித்தன .

சில நிமிடங்களின் எல்லோரும் பார்க்கும்படியாக அந்த காசை சுருட்டிக் கசக்கினார். அந்த பேச்சாளர் அதே கேள்வியை கேட்டார் .மீண்டும் ஒவ்வொருவரது கைகளும் உயர ஆரம்பித்தன.

சில நிமிடங்களின் பேசிகொண்டிருகையில் அந்த பணத்தை கீழே போட்டு மிதித்தார் . அந்த பணத்தை எடுத்து வினாவினார் ,இப்போது இந்த பணம் கசங்கியும் ,சுத்தம் இல்லாமலும் இருக்கிறது ,முன்பு கேட்டது போல கேட்டார் . யாருக்கு இந்த பணம் வேண்டும் என்று ?என்ன ஆச்சரியம் !மீண்டும் அனைவரது கைகளும் உயர்ந்தன.

சிரித்துக்கொண்டு அவர் கூறினார், இதிலிருந்து ஒரு பாடம் நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டும் என்று . எல்லோரும் வியப்பாக அவரின் பதிலை எதிர்பார்த்து நின்றார்கள் .

அவர் சொன்னார் ,இப்படி என்ன செய்தாலும் பணத்தின் பெறுமதி குறைவதில்லையோ அதை போல .என்ன துன்பம், துயரம், பிரச்சனை, பாடு, கவலை உங்களை வந்து உங்களை கசக்கி , மிதித்து போட்டாலும் உங்கள் பெறுமதி நிறைத்ததகவே எப்போதும் இருக்கும் என கூறி தனது பேச்சை தொடர்ந்தார்.

மனிதனின் பெறுமதி என்றும் எப்போதும் அழியாது . அந்த பெறுமதியை விருத்தி செய்வதும் ,குறைத்துக்கொள்வதும் எங்கள் ஒவ்வொருவரது கையில்தான் உள்ளது .

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்....

க.தி .வளவன்....

Thursday, May 6, 2010

உறவு

உறவு என்று சொல்ல பலவுண்டு,
விதி என்ற சொல்லால் பிளவுண்டு-அதை

பிளவு என்று சொல்ல மனமில்லை,
உறவு என்ற சொல்லை நினைக்கயிலே.
க.தி .வளவன்....

பதிடரன் .காம்


பதிடரன் என்னும் உன் பெயரை,
பதியின் அருளால் உன் இணைய பெயராக்கினாய்,

பதிடனின் பதிவுகளில்,
பல பயனுள்ள பதிவுகளை பதித்துக்கொண்டாய்,

பதிடனின் பிளாக்கர் பதிவுகளில்,
பல தரமான தகவல்களை தாங்கிநின்றாய்,

பதிடனின் இணைய களஞ்சியத்தில்,
பல இணைய இணைப்புகளை இணைத்துக்கொண்டாய்,

பதிடனின் வானொலியில்,
பல இணைய வானொலிகளை தேடித்தந்தாய்,

பதிடரனே விடாமல் பற்றிக்கொள் விழாமல் எழுந்துநிற்பாய்,
பதிடரனை விடாமல் வாழ்த்துகிறோம் விழாமல் எழுந்துநிற்க.

க.தி .வளவன்....

Wednesday, May 5, 2010

மனசு


சுடு வெயில்
கரும் புகை
இவை எதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்கு தெரியாமல் திருடிய
உன் மனசை...
க.தி .வளவன்....

குளிர்காலம்




பனியும் நிறைந்தது,
உடலும் விறைத்தது,
காற்றும் குளிர்ந்தது,
மனமும் சிலிர்த்தது,
குளிரும் பிறந்தது,

மாறுகின்ற சூழலில்;
மாறுபட்ட மனிதருடன் ,
மாறுகின்ற காலத்தில்;
மாறுபட்ட மனிதனாய்,
இன்னும் எத்தனைகாலம்
எமக்குள் நாமாக நாம்.

க.தி .வளவன்....

Sunday, May 2, 2010

கவி


அன்றைய கவி காவியத்தால் மலர்ந்தது ;
என் கவி நோதலில் பூத்தது,
இன்றைய கவி காதலில் மலர்ந்தது;
என் கவி வேதனையில் பூத்தது,

தனிமை இனிமையானது;
இனிமை தனிமை கவியானது,
இரவு பகலானது;
பகலிரவு கவியானது,

துன்பம் இன்பமானது;
இன்பதுன்பம் கவியானது,
வெறுப்பு விருப்பானது;
விருப்பு வெறுப்பு கவியானது,

கண்ணீர் மையானது;
மை கவியானது,
என்னை மறந்தேன்,
கவியில் உறைந்தேன்.
க.தி .வளவன்....

Saturday, May 1, 2010

அம்மா


அம்மா நீ என் அவதாரம்;
பாச மழையின் அதிபதியே,
அம்மா நீ என் ஆலயம்;
நட்பு மழையின் ஆரம்பமே ,
அம்மா நீ என் இதயம்;
நேச மழையின் விளைநிலமே,
அம்மா நீ என் தெய்வம்;
அன்பு மழையின் உறைவிடமே,
அம்மா நீ என் சுவாசம்;
க.தி .வளவன்....

தூயநட்பு


பாடசாலையிலும் நட்பு
பல்கலைகளத்திலும் நட்பு,
வேலைத்தளத்திலும் நட்பு,
இணையத்திலும் நட்பு,
தொலைபேசியிலும் நட்பு,
ரயில் பயணத்திலும் நட்பு,
நடைபயணத்திலும் நட்பு,

நட்பு என்பது சுவாசிப்பது,

நண்பா! உனது தூய நட்பை;
துன்பத்திலும், துயரத்திலும் கண்டேன்,

நண்பா! உனது தூய நட்பை;
பிரச்சனைகளிலும், பாடுகளிலும் கண்டேன்,

நண்பா! உனது தூய நட்பை;
கவலையிலும், கண்ணீரிலும் கண்டேன்,
க.தி .வளவன்....