
ஈசல்கள் கூட்டம் கூட,
எறும்புகள் இரை தேட,
தவளைகள் கீதம் பாட,
பறவைகள் பர பரக்க,
மேகம் திரை மூட,
பானு ஒளி குன்ற,
மண்ணில் இருள் சூழ,
பகல் இரவாக,
இந்திரன் குணம் கொள்ள,
மின்னல் படம் எடுக்க,
இடி இசை இசைக்க,
காற்று உலா வர,
விவசாயி கூத்தாட,
மழலைகள் மகிழ்ந்தாட,
மிருகங்கள் வெருண்டோட,
மரம் ,செடி,கொடிகள் கனாக்கான,
சர சரவென சலங்கை சத்தமிட்டு,
பட படவென விழுதே,
என் வீட்டுத் தகர மத்தளமிட்டு,
கிராமத்து மாரி மழை.
ஆக்கம்-க.தி .வளவன்....