Thursday, June 3, 2010

உழைப்பு


பட்டம் பலவிருந்தும்,
பலகலைகள் தெரிந்திருந்தும்,
சட்டம் பலபடித்தும்,
சாதனைகள் பல செய்திருந்தும்,

உண்ண உணவிருந்தும்,
உடுக்க உடையிருந்தும்,
உற்றார் உறவிருந்தும்,
உடன்பிறப்பு பலவிருந்தும்,

உழைப்பு இல்லையெனின்,
ஊர் தெரு நாயும் மதியாதடா!
உழைத்து உதவிடடா,
ஊர் போற்றி வணங்குமடா!
ஆக்கம்-க.தி .வளவன்....

1 comment: