Tuesday, June 1, 2010

தாய்


ஈரைந்து மாதம் நீ தவமிருந்தாய்,
ஈன்றதாயெனும் பெருமை நீ அடைந்தாய்,
ஈசன்மகனென்று சொல்லி நீ மகிழ்ந்தாய்,

நான் பசிக்க நீ பசிமறந்தாய்,
நான் அழ நீ அல்லலடைந்தாய்,
நான் மகிழ நீ மனமகிழ்ந்தாய்,

பள்ளி படிப்பில் பலத்தைத்தந்தாய்,
பரீட்சை நேரம் பல இரவு விழித்திருந்தாய்,
பட்டம் பெற்றதும் பரவசமடைந்தாய்,

உலகத்தை நீ உணர்த்தி வைத்தாய்,
உண்மை வெல்லுமென நீ ஞானம் தந்தாய்,
உறவு பலவெனக்கு நீ அறியச்செய்தாய்,

ஊக்கம் ஓங்க வைத்தாய்,
அன்பை உணர வைத்தாய்,
வெற்றி பிறக்க வைத்தாய்...
ஆக்கம்-க.தி .வளவன்....


3 comments: