
வெள்ளை நிறத்தவனே,
வெள்ளை மனத்தவனே,
வெள்ளை குணத்தவனே,
வெள்ளை என அழைப்பவனே,
பிரதீபன் அண்ணா என,
பல முறை கூப்பிடுவேன்,
ஓம் ஓம் என சொல்லி,
ஓடோடி வருவீங்களே!
Gate வாசலிலே,
பல கதைகள் கதைத்திருக்கோம்,
எம்மை விட்டு போவதை,
ஒருநாளும் சொல்லலையே,
Cricket விளையாடி,
வீண் சண்டை போடுவோமே,
குழுக்கள் பிரிகையிலே,
உன்பக்கம் எனை அழைப்பாய்,
கூடி திரிகையிலே,
என்னையும் நீ அழைப்பாய்,
வருஷம் பிறந்தவுடன்,
பல கோவில் சென்றிருந்தோம்,
குளிக்கப் போகையிலும்,
குட்டி வணக்கிடிவாய்,
கும்பிட்ட தெய்வம் உன்னை,
கைவிட்டுப் போனதுவே,
திருமலை பல கடந்து,
Colombo வரை சென்றிருந்தாய்,
கொடிய அரக்கன் அவன்,
திருமலைக்கு திருப்பி வைத்தான்,
Action Faimல் உத்தியோகம்,
என சொல்லி,
உற்றார் உறவெல்லாம்,
ஊர் கூடி மகிழ்ந்தனராம்,
உத்தியோகம் போன பிள்ளை,
உயிரின்றி வருகையிலே,
உற்றார் உறவெல்லாம்,
உரத்து மார்பு தட்டி கதறினராம்,
ஆண்டு நான்கு ஆகுதண்ணா,
ஆழ்மனதில் நீ உள்ளாயண்ணா,
ஆழப் பதிந்ததினால்,
ஆண்டாண்டு வாழ்வாயண்ணா..
ஆக்கம்-க.தி .வளவன்....
No comments:
Post a Comment