
கொட்டும் பனியும்,
சுட்டெரிக்கும் வெயிலும்,
நித்தம் வெளிநாட்டில்,
நிம்மதி எமக்கில்லை,
ஆங்கில தமிழும்,
கோமாளி நாகரிகமும்,
நித்தம் எம் நாட்டின்,
நினைவுகளை அழிக்குதடா,
Fast Food ஆம் பலவுண்டு ,
KFC ,PIZZA ,MCDONALD,
BBQ என சொல்லி,
பல party நடத்திறாங்க,
இத்தனையும் ஈடாகுமோ,
நம் நாட்டு உணவிற்கு?
நித்தம் சோறுகறி,
தயிர் ,ஊறுகாய்,
மோர்மிளகாய்,பப்படமும்,
பிட்டு ,இடியப்பம் ,
தோசை ,இட்டலி,
பொங்கல் ,உப்புமா,
பாயாசம்,வடை,
பூரி ,கூழ், என,
பலவகை உணவுகளாம்,
நினைக்கையிலே ஊறுதடா,
எம்நாட்டு உணவினினை!
பாவாடை தாவணியும்,
வேட்டி சால்வையும் ,
வேதனையில் உள்ளதடா,
வெளிநாட்டில் வெட்கத்துடன்,
கல் தோன்றா மண்தோன்றா,
தமிழ் மொழியும் ,நாகரிகமும்,
தொலையுதடா எம்மை விட்டு !!
ஆக்கம்-க.தி .வளவன்....
No comments:
Post a Comment