Tuesday, June 22, 2010

அம்மா

அழகிய கடற்கரையில்,
அம்மா என தலைப்பிட்டு
எழுதி முடிப்பதற்குள்,
அலை மாதா,
அலை கொண்டு,
அழைத்து
சென்றாள்,
அன்னையவளை,
அழகிய கவியென்று.
ஆக்கம்-க.தி .வளவன்

நாணம்

தொட்டாஞ் சினிங்கியே,
உன் நாணத்தை,
நான் உணர்ந்தேன்,
உன் அருகில்,
நான் வந்த போது,
நீ
யெல்லோ,
பெண்ணிற்கு இலக்கணம்..

ஆக்கம்-க.தி .வளவன்

Monday, June 21, 2010

பள்ளி நட்பு

எங்கோ பிறந்தோம்,
எங்கோ வளர்ந்தோம்,
எங்கோ வாழ்கிறோம் ,

அறியா வயதில்,
நாம் அறிமுகமானோம்,
நட்பின் அருமை,
அன்று நாம் அறியோம்,

ஒரு இலையில்,
உண்டு மகிழ்ந்தோம்,
பல ஆட்டம்,
ஆடி மகிழ்ந்தோம்,
பல இடங்கள்,
சென்று வந்தோம்,
பல கதைகள்,
கதைத்து மகிழ்ந்தோம்,
பல இரவு,
சேர்ந்து படித்தோம்,
சில சண்டைகள்,
போட்டும் உண்டோம்,

காலம் தன்,
வேலையை காட்ட,
பல நாடு,
பிரிந்து சென்றோம்,
ரயில் பயணமோ பள்ளி நட்பு?
என நினைக்கையில்,

பல நட்பை மீட்டுத்தந்தது,
முகப்புத்தகம்,
மீண்டும் பிறந்தோம்
பள்ளி நினைவில்!
ஆக்கம்-க.தி .வளவன்

Sunday, June 20, 2010

பிறந்த மண்

பிறந்த மண்ணை ,
தவழ்ந்த மண்ணை ,
வளர்ந்த மண்ணை ,
வாழ்ந்த மண்ணை,
சொந்த மண்ணை,

நினைவில் வாழும் மண்ணை ,
நினைக்க மறந்திடுமோ ?
நினைக்க மறுத்திடுமோ?

பிழைக்க வந்த ,
உடம்பு வாழும் ,
புகலிட மண்ணைவிட?
ஆக்கம்-க.தி .வளவன்

களவு



மனதை,

கண் இமைப்பதற்குள்,

களவு கொண்டாயே?

கண்கள் களவு செய்வதை அறிந்தேன்,

உன்னை பார்த்த பின்பு!

ஆக்கம்-க.தி .வளவன்

Thursday, June 17, 2010

கண்ணே கண்மணியே!


கண்ணே கண்மணியே,
உன்னை நினைக்காத,
நாளில்லை,
உன்னை நினைக்காமல்,
நானில்லை,

நீயின்றி கவியில்லை,
நீயின்றி விடிவில்லை,
நீயின்றி காதலில்லை,
நீயின்றி நானில்லை.
ஆக்கம்-க.தி .வளவன்....

Friday, June 11, 2010

பெண்!

அழுகையில்,
கண்ணீர் துடைக்கும் அம்மா நீ,

பிரச்சனையில்,
பிரச்சனை பகிரும் மனைவி நீ,

சாதனையில்,
சாதனை பேசும் சகோதரி நீ,

கஷ்டத்தில்,
அறிவுரை சொல்லும் அமைச்சர் நீ,

துன்பத்தில்,
துயர் தீர்க்கும் நண்பி நீ,

கலக்கரை விளக்காய்,
காலமெல்லாம் ஒளிர்பவளும் நீ..
ஆக்கம்-க.தி .வளவன்....

Friday, June 4, 2010

பிரதீபன் அண்ணா!!!



வெள்ளை நிறத்தவனே,
வெள்ளை மனத்தவனே,
வெள்ளை குணத்தவனே,
வெள்ளை என அழைப்பவனே,

பிரதீபன் அண்ணா என,
பல முறை கூப்பிடுவேன்,
ஓம் ஓம் என சொல்லி,
ஓடோடி வருவீங்களே!
Gate வாசலிலே,
பல கதைகள் கதைத்திருக்கோம்,
எம்மை விட்டு போவதை,
ஒருநாளும் சொல்லலையே,

Cricket விளையாடி,
வீண் சண்டை போடுவோமே,
குழுக்கள் பிரிகையிலே,
உன்பக்கம் எனை அழைப்பாய்,
கூடி திரிகையிலே,
என்னையும் நீ அழைப்பாய்,

வருஷம் பிறந்தவுடன்,
பல கோவில் சென்றிருந்தோம்,
குளிக்கப் போகையிலும்,
குட்டி வணக்கிடிவாய்,
கும்பிட்ட தெய்வம் உன்னை,
கைவிட்டுப் போனதுவே,

திருமலை பல கடந்து,
Colombo வரை சென்றிருந்தாய்,
கொடிய அரக்கன் அவன்,
திருமலைக்கு திருப்பி வைத்தான்,
Action Faimல் உத்தியோகம்,
என சொல்லி,
உற்றார் உறவெல்லாம்,
ஊர் கூடி மகிழ்ந்தனராம்,

உத்தியோகம் போன பிள்ளை,
உயிரின்றி வருகையிலே,
உற்றார் உறவெல்லாம்,
உரத்து மார்பு தட்டி கதறினராம்,
ஆண்டு நான்கு ஆகுதண்ணா,
ஆழ்மனதில் நீ உள்ளாயண்ணா,
ஆழப் பதிந்ததினால்,
ஆண்டாண்டு வாழ்வாயண்ணா..
ஆக்கம்-க.தி .வளவன்....

Thursday, June 3, 2010

உழைப்பு


பட்டம் பலவிருந்தும்,
பலகலைகள் தெரிந்திருந்தும்,
சட்டம் பலபடித்தும்,
சாதனைகள் பல செய்திருந்தும்,

உண்ண உணவிருந்தும்,
உடுக்க உடையிருந்தும்,
உற்றார் உறவிருந்தும்,
உடன்பிறப்பு பலவிருந்தும்,

உழைப்பு இல்லையெனின்,
ஊர் தெரு நாயும் மதியாதடா!
உழைத்து உதவிடடா,
ஊர் போற்றி வணங்குமடா!
ஆக்கம்-க.தி .வளவன்....

Wednesday, June 2, 2010

படிக்க முடியவில்லையே?

பள்ளிப்பாடம் நான் படித்தேன்,
பட்டப்படிப்பும் நான் படித்தேன்,
பல கலைகள் நான் படித்தேன்,
பல கதைகள் நான் படித்தேன்,
பல கவிதைகள் நான் படித்தேன்,
பயன் என்ன?உன்னை,
படிக்க முடியவில்லையே?
ஆக்கம்-க.தி .வளவன்....

நம் நாடு போல வருமா????


கொட்டும் பனியும்,
சுட்டெரிக்கும் வெயிலும்,
நித்தம் வெளிநாட்டில்,
நிம்மதி எமக்கில்லை,

ஆங்கில தமிழும்,
கோமாளி நாகரிகமும்,
நித்தம் எம் நாட்டின்,
நினைவுகளை அழிக்குதடா,

Fast Food ஆம் பலவுண்டு ,
KFC ,PIZZA ,MCDONALD,
BBQ என சொல்லி,
பல party நடத்திறாங்க,
இத்தனையும் ஈடாகுமோ,
நம் நாட்டு உணவிற்கு?

நித்தம் சோறுகறி,
தயிர் ,ஊறுகாய்,
மோர்மிளகாய்,பப்படமும்,
பிட்டு ,இடியப்பம் ,
தோசை ,இட்டலி,
பொங்கல் ,உப்புமா,
பாயாசம்,வடை,
பூரி ,கூழ், என,
பலவகை உணவுகளாம்,
நினைக்கையிலே ஊறுதடா,
எம்நாட்டு உணவினினை!

பாவாடை தாவணியும்,
வேட்டி சால்வையும் ,
வேதனையில் உள்ளதடா,
வெளிநாட்டில் வெட்கத்துடன்,

கல் தோன்றா மண்தோன்றா,
தமிழ் மொழியும் ,நாகரிகமும்,
தொலையுதடா எம்மை விட்டு !!
ஆக்கம்-க.தி .வளவன்....

Tuesday, June 1, 2010

தாய்


ஈரைந்து மாதம் நீ தவமிருந்தாய்,
ஈன்றதாயெனும் பெருமை நீ அடைந்தாய்,
ஈசன்மகனென்று சொல்லி நீ மகிழ்ந்தாய்,

நான் பசிக்க நீ பசிமறந்தாய்,
நான் அழ நீ அல்லலடைந்தாய்,
நான் மகிழ நீ மனமகிழ்ந்தாய்,

பள்ளி படிப்பில் பலத்தைத்தந்தாய்,
பரீட்சை நேரம் பல இரவு விழித்திருந்தாய்,
பட்டம் பெற்றதும் பரவசமடைந்தாய்,

உலகத்தை நீ உணர்த்தி வைத்தாய்,
உண்மை வெல்லுமென நீ ஞானம் தந்தாய்,
உறவு பலவெனக்கு நீ அறியச்செய்தாய்,

ஊக்கம் ஓங்க வைத்தாய்,
அன்பை உணர வைத்தாய்,
வெற்றி பிறக்க வைத்தாய்...
ஆக்கம்-க.தி .வளவன்....


வாழ்ந்து காட்டுவோம்

காலம் எம்மை
கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை
கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை
தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை
கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை
பிழிந்து எடுத்தாலும்,
வாழ்க்கை எம்மை
வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை
விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்.
ஆக்கம்-க.தி .வளவன்....