என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் தேடியது, தேடுவதும் நம்பிக்கையைத்தான் ஆங்கிலத்தில் Hope என்று சொல்லுவார்கள். ஆனால் நம்பிக்கையை இரண்டாக பிரிக்கலாம் ஒன்று கொள்கைகள், கோட்பாடுகள் மதங்கள் கருத்துக்கள் என்பனவற்றில் வைக்கும் நம்பிக்கை, ஆனால் இவற்றை Hope க்குள் சேர்க்க முடியாது. ஆனால் மற்றைய நம்பிக்கை நம்மிடம் உள்ளது, நாம் எம் மீது வைக்கும் நம்பிக்கை.
எம்மால் முடியும் என்ற நம்பிக்கைதான் எம்மை ஓட்டுகிறது நம்பிக்கை உடையும் போது என்ன செய்வது, செய்கிறோம் என்று தெரிவது இல்லை. உன்னால் முடியும் என்ற சொல்லுக்கு இருக்கும் பலம் நிச்சயமாக ஒரு அணுகுண்டுக்கு இருப்பது இல்லை, நாம் அதை விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் ஒருவனுக்கு நம்பிக்கை வார்த்தையை சொல்லுங்கள், அவனுடைய நம்பிக்கை தானக வளர ஆரம்பித்து விடும், ஆனால் நாம் என்ன செய்கின்றோம் நாம் அவனிடம் எவற்றையும் கொடுக்காமல் எல்லாவற்றையும் எதிர்பார்க்கின்றோம். ஒருவனுடைய நம்பிக்கை முறிவடைய பார்த்துக்கொண்டு இருக்க வேண்டாம். ஒருவனுக்குள் இருக்கும் ஆசையை நிறைவேற்ற, அல்லது நினைத்ததை சாதிக்க, வாழ்க்கையில் வெற்றி பெற என எல்லாவற்றுக்கும் நம்பிக்கை என்பது முக்கியமானது. ஒன்றை மறந்து விடாதீர்கள் நீங்கள் சொல்லும் சொற்கள் கூட ஒருவனுடைய நம்பிக்கையை உடைக்கும் அல்லது உயர்த்தும்.
ஆனால் மாறாக நாம் அதிகம் நம்புபவை மதங்கள், கோட்பாடுகள் கொள்கைள் என்று சொல்லலாம். இவற்றின் மீது அதிகம் நம்புகிறவர்களை நாம் தீவிரவாதிகள் எனலாம். இன்று உலகில் பயங்கரவாதிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசம் காண்பதில் பெரிய பிரச்சனை உள்ளது. ஒரு கொள்ளை அல்லது ஒரு நம்பிக்கை மீது அளவுக்கு அதிகமாக நம்புவது தீவிரவாதம் என்று பொருள் அந்த தீவிரவதத்தை நாம் மற்றவர்களிடம் புகுத்த நினைப்பது தவறு, அதைச்சாதிப்பதற்கு நாம் கையில் எடுப்பது தான் பயங்கரவாதம், அதைத்தான் இன்றைய திவிரவாதம் செய்கின்றது. தீவிரவாதம் தவறு இல்லை, அளவுக்க அதிகமாக போகக்கூடாது, என்றைக்கு நாம் மற்றவர்களுடைய கொள்கை கோட்பாடுகளை மதிக்கிறோமோ அன்றுதான் பயங்கரவாதத்திற்கு வேலை இல்லாமல் போகும். ஒன்று என்னவேன்றால் நாம் எல்லோருமே எதாவது ஒன்றை நம்புகிறோம் பெற்றோர் தொடக்கம் மதம் தலைவர் கட்சி என சின்ன விடயங்களைக் கூட நாம் நம்புகிறோம். நம்புவதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் மற்றவர்களுடைய நம்பிக்கையை மதியுங்கள், முட்டாள்தனமான நம்பிக்கையாக இருந்தால் கூட மதியுங்கள், நீங்கள் அவற்றை நம்ப வேண்டியது இல்லை. அப்படி செய்யும் போதுதான் இன்றைய உலகின் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும். மற்றவனுடைய நம்பிக்கையை நாம் ஏற்றுக்கொண்டு மதிக்க மறுக்கும் இடத்தில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இன்றைய உலகின் பாதிப்பிரச்சனைக்கு எம்முடைய நம்பிக்கைகள் தான் காரணம். உங்களுடைய நம்பிக்கைகள் உங்களிடமே இருக்கட்டும் மற்றவர்களுக்கு புகுத்த நினைக்கவேண்டாம், சற்று சிந்தியுங்கள்! மற்றவர்கள் சொல்லுகிறார்களே என்பதற்காக சண்டைக்கு போகவேண்டாம். பலமுறை சிந்தியுங்கள்.
ஆங்கிலத்தில் Hope க்கும், Believe க்கும் நிறைய வித்தியசம் உண்டு ஆனால் தமிழில் இரண்டு சொற்களும் குழப்பத்தை தரும். உங்கள் மீது, அல்லது ஒருவன் மீது நம்பிக்கை வைப்பதற்கும், ஒன்றில் மீது நம்பிக்கை வைப்பதற்கும் நிறை வித்தியாசம் உள்ளது, ஆனால் நம்பிக்கை என்ற சொல்லை இரண்டு இடத்திலும் பாவிக்கிறோம், சற்று குழப்பமானது தான். ஏதுவானாலும் உங்கள் மீது நம்பிக்கையை வையுங்கள் மற்றவனுக்கு நம்பிக்கையை ஊட்டுங்கள் ஆனால் மற்றய நம்பிக்கைகளில் மூழ்கிவிடாதீர்கள் என்பது தான் என்னுடைய எண்ணம்.
எம்மால் முடியும் என்ற நம்பிக்கைதான் எம்மை ஓட்டுகிறது நம்பிக்கை உடையும் போது என்ன செய்வது, செய்கிறோம் என்று தெரிவது இல்லை. உன்னால் முடியும் என்ற சொல்லுக்கு இருக்கும் பலம் நிச்சயமாக ஒரு அணுகுண்டுக்கு இருப்பது இல்லை, நாம் அதை விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் ஒருவனுக்கு நம்பிக்கை வார்த்தையை சொல்லுங்கள், அவனுடைய நம்பிக்கை தானக வளர ஆரம்பித்து விடும், ஆனால் நாம் என்ன செய்கின்றோம் நாம் அவனிடம் எவற்றையும் கொடுக்காமல் எல்லாவற்றையும் எதிர்பார்க்கின்றோம். ஒருவனுடைய நம்பிக்கை முறிவடைய பார்த்துக்கொண்டு இருக்க வேண்டாம். ஒருவனுக்குள் இருக்கும் ஆசையை நிறைவேற்ற, அல்லது நினைத்ததை சாதிக்க, வாழ்க்கையில் வெற்றி பெற என எல்லாவற்றுக்கும் நம்பிக்கை என்பது முக்கியமானது. ஒன்றை மறந்து விடாதீர்கள் நீங்கள் சொல்லும் சொற்கள் கூட ஒருவனுடைய நம்பிக்கையை உடைக்கும் அல்லது உயர்த்தும்.
ஆனால் மாறாக நாம் அதிகம் நம்புபவை மதங்கள், கோட்பாடுகள் கொள்கைள் என்று சொல்லலாம். இவற்றின் மீது அதிகம் நம்புகிறவர்களை நாம் தீவிரவாதிகள் எனலாம். இன்று உலகில் பயங்கரவாதிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசம் காண்பதில் பெரிய பிரச்சனை உள்ளது. ஒரு கொள்ளை அல்லது ஒரு நம்பிக்கை மீது அளவுக்கு அதிகமாக நம்புவது தீவிரவாதம் என்று பொருள் அந்த தீவிரவதத்தை நாம் மற்றவர்களிடம் புகுத்த நினைப்பது தவறு, அதைச்சாதிப்பதற்கு நாம் கையில் எடுப்பது தான் பயங்கரவாதம், அதைத்தான் இன்றைய திவிரவாதம் செய்கின்றது. தீவிரவாதம் தவறு இல்லை, அளவுக்க அதிகமாக போகக்கூடாது, என்றைக்கு நாம் மற்றவர்களுடைய கொள்கை கோட்பாடுகளை மதிக்கிறோமோ அன்றுதான் பயங்கரவாதத்திற்கு வேலை இல்லாமல் போகும். ஒன்று என்னவேன்றால் நாம் எல்லோருமே எதாவது ஒன்றை நம்புகிறோம் பெற்றோர் தொடக்கம் மதம் தலைவர் கட்சி என சின்ன விடயங்களைக் கூட நாம் நம்புகிறோம். நம்புவதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் மற்றவர்களுடைய நம்பிக்கையை மதியுங்கள், முட்டாள்தனமான நம்பிக்கையாக இருந்தால் கூட மதியுங்கள், நீங்கள் அவற்றை நம்ப வேண்டியது இல்லை. அப்படி செய்யும் போதுதான் இன்றைய உலகின் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும். மற்றவனுடைய நம்பிக்கையை நாம் ஏற்றுக்கொண்டு மதிக்க மறுக்கும் இடத்தில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இன்றைய உலகின் பாதிப்பிரச்சனைக்கு எம்முடைய நம்பிக்கைகள் தான் காரணம். உங்களுடைய நம்பிக்கைகள் உங்களிடமே இருக்கட்டும் மற்றவர்களுக்கு புகுத்த நினைக்கவேண்டாம், சற்று சிந்தியுங்கள்! மற்றவர்கள் சொல்லுகிறார்களே என்பதற்காக சண்டைக்கு போகவேண்டாம். பலமுறை சிந்தியுங்கள்.
ஆங்கிலத்தில் Hope க்கும், Believe க்கும் நிறைய வித்தியசம் உண்டு ஆனால் தமிழில் இரண்டு சொற்களும் குழப்பத்தை தரும். உங்கள் மீது, அல்லது ஒருவன் மீது நம்பிக்கை வைப்பதற்கும், ஒன்றில் மீது நம்பிக்கை வைப்பதற்கும் நிறை வித்தியாசம் உள்ளது, ஆனால் நம்பிக்கை என்ற சொல்லை இரண்டு இடத்திலும் பாவிக்கிறோம், சற்று குழப்பமானது தான். ஏதுவானாலும் உங்கள் மீது நம்பிக்கையை வையுங்கள் மற்றவனுக்கு நம்பிக்கையை ஊட்டுங்கள் ஆனால் மற்றய நம்பிக்கைகளில் மூழ்கிவிடாதீர்கள் என்பது தான் என்னுடைய எண்ணம்.
Source and Thanks:

No comments:
Post a Comment